ஆயுதமேந்திய படையினர் மூலம் மக்களை அடக்க அரசாங்கம் முயற்சி! July 14, 2022 7:37 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது. இந்த தருணத்தில் இருவரை மாத்திரம் பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டும்.முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டவாறு ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.அதிகார வெறி பிடித்த ஐனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கும்பலின் ஏமாற்று நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இனி மேலும் இந்த ஏமாற்று நடவடிக்கைக்கு இடமில்லை.ஜனநாயகத்திற்காக போராடும் மக்களை அடக்குமுறைக்குட்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். பாதுகாப்பு படையினர் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை காப்பாற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.மக்களின் அமைதியான வாழ்வுடன் விளையாடுவதை அரசாங்கம் கைவிட வேண்டும். இத்தருணத்தில் மக்கள் அமைதியாகவும் ஜனநாயகத்தை மதித்தும் செயற்பட வேண்டும் என்றார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…