சட்டம் ஒழுங்கைப் பேண உதவுமாறு சவேந்திர சில்வா கோரிக்கை!

நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    
ஜனாதிபதியின் பதவி விலகல் இன்று இடம்பெறும் என சபாநாயகர் தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், வருங்கால ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவருடன் கலந்துரையதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!