அதிநவீன ஏவுகணைகள் மூலம் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்களை கொன்று குவித்த ரஷ்யா! July 15, 2022 7:23 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 130 நாட்களை கடந்தும் உக்கிரமாக தொடர்கிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்கான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.இது குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மைக்கோலைவ் நகரில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ரஷ்ய படைகள் அதிநவீன ஏவுகணைகளை கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தியதில் 350 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.அதே போல் மைக்கோலைவ் நகரில் உள்ள தற்காலிக ராணுவ முகாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 70 வீரர்கள் பலியாகினர்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…