உலக அரசியல் வரலாற்றில் முக்கியத்தும் பெறும் இலங்கையின் புதிய ஜனாதிபதி

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை உலக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாக காணப்படும் என  சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். 
ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார். 

ஜனாதிபதியின் அதிகாரம் பிரதமரிடம்
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வழிமுறைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி தெரிவு நிறைவு பெறும் வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள்,கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார்.

இதேவேளை, தென்னாசியாவில் பழமையான ஜனநாயக நாடு என பெருமை கொள்ளும் நாம் புதிய ஜனாதிபதி தெரிவை முழுமையான ஜனநாயக வரைபிற்குட்பட்டதாகவும்,வினைத்திறனான முறையிலும் செயற்படுத்துவது எமது நாட்டிற்கு மாத்திரமல்ல உலக அரசியல் வரலாற்றிலும் முக்கியமானதாக காணப்படும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலகிய முதலாவது ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ஷ கருதப்படுகிறார்.

புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் வரை ஜனாதிபதிக்கான அதிகாரங்கள், கடமைகள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!