வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னரே கூட்டமைப்பு தீர்மானிக்கும்!

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
   
ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!