டலசுக்கு ஆதரவு – பல்வேறு கட்சிகள் முடிவு!

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்துள்ளன.
    
நுகேகொடையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்துக்கு பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!