நாட்டின் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பம்

நாட்டின் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில்  இன்று  நடைபெறுகின்ற நிலையில் ரகசிய வாக்கெடுப்பு  மேற்கொள்ளப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!