இறுதி நிமிட மாற்றங்களால் இவரே ஜனாதிபதியாகும் சூழல்! சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவல்

ஜனாதிபதி வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவிற்கு பலர் ஆதரவான சக்திகளாக செயற்படவுள்ள நிலையில்,இறுதி நிமிட மாற்றங்களால் இவரே ஜனாதிபதியாகும் சூழல் உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானால் சஜித் பிரேமதாச பிரதமராகும் வாய்ப்புள்ளது. இவை நடந்தேறினால் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் ஒரு முடிவிற்கு வரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!