பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமையான முறைக்கு – சுசில் பிரேமஜயந்த ..!

பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பாடசாலை வேன்கள் ஆகியவற்றை இன்று முதல் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இன்று முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபை ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்ட எரிபொருள் இரண்டு நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமைந்திருக்கும் என பாடசாலை வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பதற்கான நிலைமை காணப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதனிடையே இன்று முதல் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் தற்போதைய நிலையில் சேவையை முன்னெடுக்க தேவையான எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!