தினசரி கொரோனா மரணங்கள் அதிகரிப்பு:அரசாங்க தகவல் திணைக்களம்

கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் நேற்றும் இன்னும் 5 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 60வயதுக்கும் மேற்பட்டவர்கள் என திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் அடங்குகின்றனர்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று

இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 119 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் திணைக்களம் கூறியுள்ளது.

இந்த நோயாளிகளுடன் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 94 பேர் என பதிவாகியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!