
எமது சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ராஜபக்சர்களின் ஆட்சியை நீடிப்பதற்கு நாங்கள் எந்த விதத்திலும் துணை போக முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு ராஜபக்சர்களை பாதுகாப்பதற்கானது என்பது முழு நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெரிந்த உண்மை.
முக்கியமான தீர்மானங்களின் போது பேரம் பேசப்படுவதாக ஒரு யூகம் வெளியாகும். ஆனால் எனக்கு தெரிந்து எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் யாரும் இந்த தீர்மானங்களை எடுக்க பேரம் எதுவும் பேசவில்லை.
ஆனால் முன்னர் இருந்த இரு நாடாளுமன்றங்களில் ஒவ்வொருவர் இவ்வாறு பேரம் பேசுதலுக்கு போயிருக்கிறார்கள். 2010 இல் பியசேன கட்சி மாறி 18 ஆம் திருத்தத்திற்கு வாக்களித்தார்.அவரை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கினோம். 2015 ஆம் ஆண்டு வியாழேந்திரன் கட்சி மாறி வாக்களித்தார்.அவரையும் கட்சியிலிருந்து நீக்கினோம்”என கூறியுள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!