ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீன ஆய்வுக் கப்பல்!

சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சைனாஸ் யுவான்வாங்-5 என்ற இந்த கப்பல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    
இந்த கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று இந்திய ஊடகங்கள் எதிர்வுகூறியுள்ளன. இந்தநிலையில் குறித்த கப்பல் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் வடமேற்குப் பகுதியில் செயற்கைக்கோள் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் அதிக வட்டியுடனான சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது.

பின்னர் சீனாவிற்கான கடனை திருப்பிச் செலுத்த முடியாமையால், 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சைனாஸ் யுவான்வாங்-5 விண்வெளி கண்காணிப்பு கப்பல் விண்வெளி-தரை தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்தி வருகிறது.

அத்துடன் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை நிர்ணயம் மற்றும் அணுகலுக்கு முக்கியமான தகவல் வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!