ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான ஆவணங்கள் தயார்:ஹரின் பெர்னாண்டோ

உயர் நீதிமன்றத்தினால், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒரு பரிந்துரை மாத்திரமே தேவை
இந்த ஆவணங்கள் அடங்கிய கோப்புக்கு சட்டமா அதிபரின் ஒரு பரிந்துரை அவசியமாக இருக்கின்றது. அது கிடைத்தவுடன் ஜனாதிபதி ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் கடிதத்தில் கையெழுத்திடுவார்.

இதனடிப்படையில், விரைவில் சில தினங்களுக்குள் ரஞ்சன் ரதநாயக்க ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கடூழிய சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதுடன் அங்கிருந்து வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!