தொடர் கனமழை: கேரளாவுக்கு சிவப்பு எச்சரிக்கை! August 2, 2022 9:45 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கேரளாவின் கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார். மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் அம்மாநிலத்தில் திருவனந்தபுரம் முதல் இடுக்கி வரை உள்ள ஏழு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் மிகக்கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இன்று கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, நிரம்பி வழிந்த கால்வாயில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். முன்னதாக, கொல்லம் மாவட்டம் கும்பவுருட்டி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…