ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு August 6, 2022 10:12 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஹிருணிகாவிற்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருனிகா உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான வழக்கு நேற்று(05) விசாரணைக்கு வந்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 6ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஹிருணிகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கு நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த குழுவை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.மேலும் கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிப்பதற்கான முறையான விசாரணைகளை மேற்கொண்டு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…