சீனாவை தொடர்ந்து இலங்கைக்கான கடனை இடைநிறுத்திய மற்றொரு நாடு August 8, 2022 9:13 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்ஸிடம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது பிரதானமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இதேவேளை இலங்கைக்கான திட்டக்கடன் ஒன்றை ஜப்பானிய நிதி நிறுவனமும் இடைநிறுத்தியுள்ளது.ஜெய்க்கா என்ற ஜப்பானிய சர்வதேச கூட்டுத்தாபனம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரிவாக்கும் திட்டத்திற்காக நிதியுதவியை வழங்கி வந்தது.எனினும் இலங்கை அரசாங்கம் தாம் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த நிலையிலேயே ஜெய்க்கா நிறுவனமும் தமது திட்டக்கடனான 570 மில்லியன் டொலர் நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.இவை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…