ஒவ்வொரு மாதமும் எரிவாயு விலையைத் திருத்தம் செய்ய அனுமதி

விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவு வரம்பின் அடிப்படையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி யோசனை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!