நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய தயார்: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு August 12, 2022 8:51 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் சர்வ கட்சியின் தேவையை நாங்கள் புரிந்து கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“சர்வகட்சி அரசாங்கம் உருவாகும் எனில் நாங்கள் நாட்டு மக்களின் நன்மை கருதியும் நாட்டின் சூழ்நிலை கருதியும் சில நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய தயாராக உள்ளோம்.ஆனால் கடந்த காலங்களில் ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுகளில் அவர்களை ஏமாற்றியுள்ளனர்.இதனை நல்ல அனுபவமாக கொண்டு,யாரிற்கும் நாங்கள் எழுந்தமானமாக ஏமாற்றுத்தனமாக ஆதரவு தருவதற்கு தயாராக இல்லை”என கூறியுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…