இந்திய – சீன எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்!

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    
இந்த நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தோ திபெத்திய வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்திய – சீன எல்லையில் ராணுவ வீரர்கள், தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!