அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கத் திட்டம்!

அரச நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்ட வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
   
இலங்கை விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படலாம் எனவும் ரணில் கூறியுள்ளார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!