
2007 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேர்வின் சில்வா, இன்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்போது, மேர்வின் சில்வா அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரானால் போதுமானது எனவும் உத்தரவிடப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!