80 அரசியல்வாதிகளுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு August 20, 2022 8:09 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தராதத்தில் உள்ள 80 அரசியல்வாதிகள் உட்பட 386 பேருக்கு எதிராக புதிதாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.]இதனை தவிர முறைகேடான முறையில் சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட 42 பேருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றமை சம்பந்தமான 22 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஊழல், மோசடிகள், இலஞ்சம் பெற்ற மற்றும் முறைகேடான முறையில் சொத்து சம்பாதித்தமை தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு இந்த வருடத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.இதனிடையே பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் இஞ்சம் பெறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை காணமுடிவதாக ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…