கடுமையாகும் நடைமுறை! இலங்கை வாழ் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டையில், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதிகளைக் கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்யப்பட்டது.

பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு சமிக்ஞைகள் எரியும் போது சாலையைக் கடப்பதைக் காண முடிந்தது.

மேலும் அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் வீதியைக் கடப்பது குறித்து பொலிஸாரிடம் இருந்து  கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி வீதிகளைக் கடப்போரின் அடையாள அட்டை மற்றும் பிற விபரங்கள் கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுவார்களாயின் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!