கோட்டாபயவுக்கு அடைக்கலம் கொடுக்காத உலக நாடுகள்! ரணிலுக்கும் அதே நிலை ஏற்படும் – சரத் பொன்சேகா எச்சரிக்கை

நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,“அரசுக்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும்.
இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் இந்நாள் ஜனாதிபதியும் சந்திக்க வேண்டி வரும்.

69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என்று மார்தட்டி வீர வசனம் பேசிய கோட்டாபய இறுதியில் இலங்கையைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர எத்தனிக்கின்றார்.
கோட்டாபயவிற்கு அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார். ஆனால், இதன் விபரீதத்தை அவர் விரைவில் எதிர்கொள்வார்.”என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!