தனி இராஜ்ஜியமாக்கப்படும் வடக்கு, கிழக்கு..! அமெரிக்க தூதுவரின் திட்டம் இதுதான் என்கிறார் வாசுதேவ

இலங்கையில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து விரட்டியதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அவரின் அடுத்த நோக்கம் எனவும் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!