உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு அவசர உதவி: உலக உணவுத் திட்டம்

உலக உணவுத் திட்டம் (WFP) குறைந்தபட்சம் 61,000 உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு அவசர உதவியாக 10,000 ரூபாவை நேரடி பணமாக வழங்க இணங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வாரம் தனது இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் நான்கு மாத காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 10,000 ரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிவரை அவசர நிதி உதவி தேவைப்படும், குறித்த அடையாளம் காணப்பட்ட உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்க உலக உணவுத் திட்டம் முன் வந்துள்ளது.


உயர் பணவீக்கம் மற்றும் வருமான இழப்புக்கு மத்தியில், இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு ஆளாகியுள்ளனர்.

உலக உணவு திட்ட அறிக்கையின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 33 சதவீதம் அல்லது 7.15 மில்லியன் மக்கள் தற்போது தினசரி குறைந்தபட்ச ஊட்டச்சத்து தேவைக்கு குறைவான உணவை உட்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!