பாடசாலை பையை சோதனையிட நடவடிக்கை!

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில், மாணவர்களின் பாடசாலை பையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
  
இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும், ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களின் பைகளில் சூட்சுமமாக வைக்கப்படுகிறது என்றார். இது தொடர்பில் பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!