புலியுடன் போராடி குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்!

மத்திய பிரதேசம் பந்தாவ்கர் புலிகள் சரணாலயத்திலுள்ள புலி ஒன்று அங்கிருந்து வெளியேறி, அருகிலுள்ள ரோஹானியா கிராமத்துக்குள் புகுந்துள்ளது. இதை அறியாமல் ஒரு வயது மகனை தூக்கிக் கொண்டு பெண் ஒருவர் விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த புலி, திடீரென பாய்ந்து 2 பேரையும் தாக்கியுள்ளது. இதில் மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
   
பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மகனை கவ்வி செல்ல முயன்ற புலியுடன் போராடி தனது மகனை போராடி அப்பெ காப்பாற்றியுள்ளார். புலி அதன் நகங்களால் பலமுறை அவரைத் தாக்கியது. அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து, புலியை விரட்டியடிக்கவே, 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!