பிரதமர் மோடியின் பரிசுகள் மற்றும் நினைவு பொருட்களின் ஏலம்! September 13, 2022 7:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிரதமர் மோடியின் பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களின் ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என தேசிய நவீன கலைக்கூடம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவு பொருள்களின் மின்னணு ஏலம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பேசிய என் ஜி எம் ஏ இயக்குனர், எங்களிடம் 1200 பொருட்கள் உள்ளன. அவை அனைத்தையும் காண்பிப்பது கடினம் . அதனால் 100 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான 300க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என கூறியுள்ளார். 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தின் மூலம் வருகிற 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலதரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடம் பெறுகிறது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…