உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பானை ஒன்றை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இதற்கமைய, ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதியை பொறுப்புக் கூறுமாறு கோரி ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்ட ஜேசுதாசன் நடேசன் மற்றும் சிறில் காமினி பியனாம ஆகியோர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

மனு பரிசீலனை

இந்த மனு இன்றைய தினம் கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.  தனிப்பட்ட முறைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேகநபராக பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!