ஐக்கிய தேசியக் கட்சி அடகு வைக்கப்பட்டுள்ளது! சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் எதிர்காலத்தில் நெலும் மாவத்தையில், காக்கையிடம் வேட்புமனு பெற வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் சென்று தமது துயரங்களைத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.அதேவேளை, நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வரை எந்தவொரு உதவியும் வழங்கப்போவதில்லை என சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளன என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!