ஜெனிவா விவகாரம்! அரசை மீறி எதுவும் நடக்காது: ரணில் உறுதி September 20, 2022 10:09 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest “ஜெனிவா சவாலை நாம் இலகுவாக முறியடித்தே தீருவோம். புதிய பிரேரணை தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசை மீறி நாட்டுக்கு எதிராக எதுவும் நடைபெற சந்தர்ப்பம் இல்லை.”என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலண்டன் செல்வதற்கு முன்னர் அரசின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,“ஜெனிவா விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடும் போது அரசு என்ற ரீதியில் மிகவும் அவதானமாக இருங்கள்.நல்லாட்சி அரசைக் குறைகூற வேண்டாம்ஜெனிவா நெருக்கடிக்குக் கடந்த நல்லாட்சி அரசைக் குறைகூறி எந்த பயனும் இல்லை. அந்தக் கால பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை.அந்த விடயத்தில் நல்லாட்சி அரசு வெற்றியும் கண்டுள்ளது.ஜெனிவா விவகாரம் தொடர்பில் இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ தூண்டும் வகையில் எவரும் கருத்துக்களை வெளியிடாதீர்கள்”என ஜனாதிபதி கூறினார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…