தேசிய பேரவைக்கான அழைப்பை நிராகரித்தார் விக்கி! September 24, 2022 9:10 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய பேரவை அமைப்பதற்கு பங்கடுக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம் பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது பிரதமர் முன்வைத்த யோசனையை நிராகரித்துள்ளார்.இதன் போது கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய நீதியாக மக்கள் பிரதிநிதிகள் தமது தேவைப்பாடுகள் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலே விளக்கி கூறுகிறார்கள்.குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திலே அவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசுகிறோம் எழுத்து மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புகிறோம் ஆனால் பிரச்சனைகள் தீர்வதாக இல்லை. இவ்வாறான நிலையில் தேசிய பேரவை என ஒன்றை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து விடுவதாக நான் எண்ணவில்லை.அவ்வாறாயின் மாகாண நீதியில் பேரவையை உருவாக்கங்கள் வடக்கில் எங்கள் பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சனைகளை முன் வைக்கிறோம் மத்தியில் இருந்து ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வருகை தந்து எமது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கட்டும் என அவர் மேலும் தெரிவித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…