உயர்பாதுகாப்பு வலய வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு! September 27, 2022 8:13 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி வெள்ளிக்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.அதனை சவாலுக்கு உட்படுத்தியே சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முன்அனுமதியின்றி குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களை நடத்த முடியாது என வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பாராளுமன்ற வளாகம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, இலங்கை கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத் தலைமையகம் அக்குரேகொட, கொம்பனித் தெரு விமானப் படைத் தலைமையகம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை அதியுயர் பாதுகாப்பு வலயங்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…