அமெரிக்காவில் 2 குடும்பத்தை கொல்ல திட்டமிட்ட 12 வயது சிறுமி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 2 குடும்பத்தை மொத்தமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்ட சிறுமி ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். டெக்சாஸ் மாகானத்தின் வெதர்ஃபோர்ட் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர். சம்பவப்பகுதியில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 12 வயது சிறுமி ஒருவர் தெருவில் கிடந்துள்ளார்.
    
அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பொலிசார் குறிப்பிட்ட குடியிருப்புக்குள் சென்று சோதனையிட்டதில், அந்த சிறுமியின் 38 வயது தந்தையும் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் குற்றுயிராக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இருவரையும் உடனடியாக ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது அந்த சிறுமியும் அவரது ஒரு தோழியும் இணைந்து அவர்களது குடும்பங்களைக் கொல்ல திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

பல வாரங்களாக இருவரும் இதற்கு திட்டமிட்டு வந்திருக்கலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர். மேலும், தமது குடும்பத்தை கொன்றுவிட்டு, இங்கிருந்து இரண்டாவது சிறுமியின் குடியிருப்புக்கு செல்வதே திட்டம் எனவும் தெரியவந்துள்ளது.தற்போது காயங்களுடன் தப்பிய சிறுமியும் அவரது தந்தையின் நிலை தொடர்பிலும் பொலிசார் தகவல் ஏதும் வெளியிட மறுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!