உணவுப் பொதிகளுடன் வடக்கிற்கு வருகிறது சீனா!

சீன செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!