தேசிய விலங்காக பசுமாடு அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றம் அதிரடி!

இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்நிலையில் பசுமாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுப்ரீம் கோட்டில் இன்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதான் கோர்ட்டின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை நீங்கள் ஏன் தாக்கல் செய்கிறீர்கள். எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

நீங்கள் நீதிமன்றத்திற்கு வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்க விட வேண்டுமா? என மனுதாரருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதன் பிறகு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் மனுத்தாக்கல் செய்த மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் மனவே திரும்ப பெறுவதாக மனுதாரர் தெரிவித்தார். இதனையடுத்து பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்கு அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!