நெதர்லாந்தின் பட்டத்து இளவரசி உயிருக்கு ஆபத்து: கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றம்!

நெதர்லாந்தின் பட்டத்து இளவரசி கத்தரினா-அமாலியாவின் ஆபத்து இருப்பதாக வந்த தகவல்களையடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புக் காரணங்களால் அவர் மாணவர் விடுதியில் தங்குவதற்கான தனது திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவருக்கு 18 வயதான சில வாரங்களுக்கு பிறகு பட்டப்படிப்பிற்காக ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற நிலையில், இப்போது இவர் அரண்மனையை விட்டு வெளியே வரமாட்டார் என நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி ராணி மாக்ஸிமா அறிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர், ஆனால் அமலியா மற்றும் பிரதம மந்திரி மார்க் ரூட்டே ஆகியோரது பெயர்கள் சில கிரிமினல் குழுக்களால் கடிதப் பரிமாற்றத்தில் குறிப்பிடப்பட்டதாக அறிக்கைகள் வந்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய புதிய கவலைகளைத் தூண்டியுள்ளன, அங்கு பிரபலங்கள் பலர் பாதுகாப்பு இல்லாமல் அடிக்கடி நடமாடுகிறார்கள்.
அமாலியாவின் நிலைமை இன்னும் பயங்கரமானது மற்றும் கவலைக்கிடமானது என்று பிரதமர் ருட்டே கூறினார். ஏனெனில் அவர் சமீபத்தில் வரை Hague நகரத்தைச் சுற்றி அடிக்கடி பைக்கில் காணப்பட்டார்.

மொரோக்கோ வம்சாவளியின் காரணமாக பெயரிடப்பட்ட மோக்ரோ-மாஃபியா, ஆம்ஸ்டர்டாமின் வளர்ந்து வரும் கோகோயின் வர்த்தகம் மற்றும் நெதர்லாந்தில் வளர்ந்து வரும் போதைப்பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்ட குற்றவியல் அமைப்புகளாகும்.இந்த அமைப்பால் தான் இப்போது பட்டத்து இளவரசிக்கு இப்போது பாதுகாப்பது அச்சுறுத்தல் இருப்பதாக அரச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற டச்சு நிருபர் ரிக் எவர்ஸ் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!