22 ஆவது திருத்தம் நிறைவேறியது – பசிலின் கனவு தவிடுபொடி! October 22, 2022 8:30 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 178 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும்,எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டன. சரத் வீரசேகர மட்டும் எதிர்த்து வாக்களித்தார். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு மீதான வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 45 பேர் கலந்து கொள்ளவில்லை. மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் 174 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எவரும் எதிராக வாக்களிக்கவில்லை. இதையடுத்து 22 ஆவது திருத்தம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…