பௌத்த தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

உடுவே தம்மாலோக தேரர், கிருலப்பனை- பொல்ஹெங்கொட அலன் மதினியாராமய விகாரையை அண்மித்த பொது மக்களுக்கு எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாத வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் மீதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.




* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!