டொரொன்டோ துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் வரை படுகாயம்! – பலர் பலி?

கனடாவில் டொரொன்டோ நகரில் நேற்றிரவு 10 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 15 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

5 இற்கும் 15இற்கும் இடைப்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பலர் பலத்த காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 25 துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தங்களுக்கு கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என டொரொன்டோ ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் யார் என தெரிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் கேட்டுகொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சிலல் இறந்திருப்பதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!