பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துள்ள வரவு செலவுத் திட்டம்! November 15, 2022 8:53 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest 2023 வரவு செலவுத் திட்டம், பாதிக்கப்பட்டுள்ள மக்களை முழுமையாக புறக்கணிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், எவ்வித பதிலுமில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அரசாங்கம் முழுமையாக புறக்கணித்துள்ளது. நடுத்தர மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தில், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்வாங்கப்படவில்லை. பாரம்பரியமான வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில், வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என, ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.நாட்டு மக்களின் நலனுக்காகவே, அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை, அவர் விளங்கிக் கொள்ளவில்லை. வரிக்கு மேல் வரி விதிப்பு, இதனை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும். நிவாரணத்தை தவிர்த்து, நாட்டு மக்கள் சுயமாக முன்னேற்றமடையும் யோசனைகள் குறிப்பிடப்படவில்லை. சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை பாதிப்புக்குள்ளாக்கி, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…