மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டாபயவின் தந்திரோபாய காய்நகர்த்தல்!

இலங்கையின் அரசியலில் ஒவ்வொரு நாளும்  பல்வேறு நெருக்கடியான சூழல் பதிவாகி வருகின்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் கோட்டாபய அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது.
 அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை இரத்துச்செய்தார்.

நாட்டில் நடந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவுக்கு செல்ல விசா கோரி விண்ணப்பத்திருந்தார். எனினும் அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்தது. இந்நிலையிலே  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இவ்வாறு கோரிக்கை விடுககப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!