பிரசாதம் தயாரிக்கும் போது தீப்பிடித்து அர்ச்சகர் பலி!

ஜெயநகர்-கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் போதுதீப்பிடித்ததில் அர்ச்சகர் உயிரிழந்தார். பெங்களூரு ஜெயநகர் நான்காவது பிளாக்கில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் நாகய்யா, 61. இவர் கடந்த, 18ம் தேதி வழக்கம் போல பிரசாதம் தயாரிப்பதற்காக கோவிலின் கீழே உள்ள சமையலறைக்கு சென்று கேஸ் அடுப்பை பற்ற வைப்பதற்காக திறந்தார்.
    
அப்போது அவரிடம் தீப்பெட்டி இல்லை.அங்கேயே தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே ஸ்டவ்வை ‘ஆப்’ செய்யாமலேயே தீப்பெட்டியை எடுத்து வர மேலே உள்ள அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த அர்ச்சகர், கேஸ் கசிவது தெரியாமல், தீயை பற்ற வைத்தார். அப்போது குபீரென தீப்பிடித்தில் அர்ச்சகர் படுகாயம் அடைந்து, பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அர்ச்சகர் நேற்று உயிரிழந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!