இலங்கையின் திறனைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இந்தியா அர்ப்பணிப்பு November 26, 2022 9:00 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கையின் திறனைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்காக, இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.இந்திய உயர்ஸ்தானிகரகம், நேற்றுமுன் தினம் இந்தியா மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இடையிலான 50 ஆண்டுகால தொடர்பை நினைவு கூர்ந்துள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வானது இந்தியாவிற்கும் இராணுவத்திற்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது.இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் அண்டை நாடு முதல் கொள்கைக்கு இணங்க, இலங்கையின் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்காக, இந்தியா உறுதிபூண்டுள்ளது.இலங்கை ஆயுதப் படைகளின் திறனை வளர்ப்பதற்கும், பிராந்திய ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதற்கும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்தியா பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு மதிப்புமிக்க பங்களிப்புகளை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இலங்கை ஆயுதப்படைகளின் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…