சிறிலங்கா வருகிறது சீனாவின் உயர்மட்டக் குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள் இந்தக் குழு கொழும்புக்கு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத்தைச் சேர்ந்த இந்தக் குழுவினர், சிறிலங்கா அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

இந்தக் குழுவுக்கு, அனைத்துலக திணைக்களத்தின் உதவி அமைச்சர் கோ யேசோ தலைமை தாங்குவார்.

சிறிலங்காவின் அரசியல் கட்சிகளுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!