மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை! அரசாங்கத்திற்கு ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை

தேர்தலை நடத்தாவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும்.

தேர்தலை ஒத்திவைக்க சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
நாட்டின் உண்மை நிலைமை மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ – அவர் தலைமையிலான அரசாங்கமோ மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!