உக்ரேனுக்காக பிரான்ஸில் ஒளிர்ந்த ஈஃபிள் கோபுரம்!

உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் உக்ரேனின் கொடி வண்ணத்தில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டு உக்ரனுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. உக்ரேன் யுத்தம் ஆரம்பமாகி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவுக்கு வந்துள்ளது.

யுத்தம் விரைவில் நிறைவுக்கு வரவேண்டும் எனவும், உக்ரேன் மக்களின் வாழ்வு அமைதிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்களுக்கு ஆதரவாக நேற்று மாலை பரிசில் மக்கள் ஒன்று கூடினார்கள். இதன்போது ஈஃபிள் கோபுரத்தில் உக்ரேனின் கொடி வண்ணத்தில் (மஞ்ச மற்றும் நீலம்) விளக்குகள் ஒளிரவிடப்பட்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!