பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய புதிய செயலி!

நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்கள் மற்றும் நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் அடிப்படையில் “Call Before u Dig” (தோண்டும் முன் அழைக்கவும்) எனும் செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக குழி பறிக்கும் போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்களது பொருட்கள் சேதம் அடைவதை தடுக்க இயலும்.

அதோடு ஆப்டிகல் பைபர் கேபிள்கள் ஆகிய நிலத்தடி சொத்துக்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு இந்த மொபைல் செயலியானது தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாலை, தொலைத்தொடர்பு, தண்ணீர், கேஸ் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஏற்படும் இடையூறுகளால் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நஷ்டத்தை இந்த செயலி குறைக்க உதவும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!