இருப்பைத் தக்க வைக்க லஞ்சம் வழங்கிய ரணில்!!


தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக வழங்கினார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தோற்கடிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சுமார் ஐந்து கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது. ரணிலிடம் பணம் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார்.

குறித்த உறுப்பினருக்கு இருந்த கடன் தொல்லை காரணமாகவே அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்தக் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவற்றைக் கூடிய விரைவில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். – Source: uthayan